
நேற்று கிள்ளான் நில அலுவகத்தில் நடைபெற்ற கம்போங் ஜாவா நிலத்திற்கான இழப்பீடு வழக்கின் விசாரணையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டார்.
கம்போங் ஜாவா வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், சிறு தொழில்களை நடத்துவோர் அங்கிருந்து வெளியெற்றப்பட்டு, பெரும் நட்டத்துக்கு ஆளா நிலையில் அந்த நிலங்களுக்கான இழப்பீட்டை வழங்காமல், பல காலமாக இழுபறியில் இருந்து வந்துள்ளது.
இந்த விசாரணையானது கிள்ளான் நில அலுவலகத்தில் கோத்தா ராஜா நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி Azmi (அஸ்மி) யின் முன்னிலையில் நடந்தது. குணராஜ் அவர்களும் கோத்தா ராஜா எம்பியும் இந்த விசாரணையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
