26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பாலிங் வெள்ளத்திற்குக் காரணமான டுரியான் கிங் தோட்டம் எனக்குச் சொந்தமானதல்ல!

பாலிங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதற்கு குனோங் ஈனாஸில் இருக்கும் டுரியான் பழத் தோட்டங்கள் தமக்குச் சொந்தமானவை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கெடா மந்திரி பெசார் சனுசி மாட் நோர் தெரிவித்தார்.
தாம் மந்திரி பெசாராக வருவதற்கு முன்னரே முந்தைய அரசினால் அத்தோட்டங்கள் தொடங்கப்பட்டதாகவும், அதனை தாம் மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு டுரியான் கிங் பழத் தோட்டங்கள்தான் காரணம் என்பதைக் கூறுவதை நிறுத்திக் கொண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கான விசாரணை முடியும் வரை காத்திருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles