
பக்காத்தான் ஹராப்பான் பதவிக் காலத்தில் அரசியல் வலு இல்லாத காரணத்தினால்தான் சட்டத்துறை அலுவலகப் பொறுப்புகளை இரண்டாகப் பிரிக்க இயலவில்லை என்று முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் தெரிவித்தார்.
ஏஜி அலுவகத்தின் பொறுப்புகளைப் பிரிக்க அரசமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்ற அவையில் பக்காத்தானுக்கு மூன்றில் இரண்டு மடங்கு ஆதரவு வேண்டும்.
ஆனால், அப்போதைய நிலையில் அது கிடைக்குமா என்ற சந்தேகம் அதிகமாக இருந்ததால், அது முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
எனினும் 18 வயதோனோர் இயல்பாக வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான திருத்தத்தை இயற்ற பக்காத்தான் வெற்றி பெற்றதாக அவர் சுட்டிக் காட்டினார்.
