
சங்கங்களின் பதிவகத்தை வைத்து, பெர்சத்து அம்னோவை பழி வாங்க முனைவதாக ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் Nur Jazlan Mohamed (நூர் ஜஸ்லான்) குற்றம் சாட்டினார்.
கட்சித் தேர்தலை பொதுத் தேர்தல் நடந்து, 6 மாதங்கள் ஒத்திவைக்கும் சட்டத் திருத்தத்தை ஆர்ஓ எஸ் கிடப்பில் போட்டிருப்பது அம்னோவை பழி தீர்க்கும் செயலென அவர் குறிப்பிட்டார்.
ஆர்ஓஎஸ்ஸை தனது கட்டுப்பட்டில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சராக இருக்கும் பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் அதில் மீழறுப்பு வேலையைச் செய்வதாக பெருத்த சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆர்ஓஎஸ்ஸை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, பெர்சத்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை மிரட்டுவதாகவும் அம்னோவுக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
