
சந்தேக நபர் ஒருவரின் விசாரணையின்போது, அவரின் 17 லட்சம் மதிப்புடைய சொத்தினை மூன்றாம் தரப்புக்கு எழுதித்தர நெருக்குதல் கொடுத்த இரு ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள்(எம்ஏசிசி) மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அந்த எம்ஏசிசி அதிகாரிகள் சம்பந்தமான செய்தி ‘எடிசி சியசாட்’ எனும் அகப்பக்கதில் வெளியிடப்பட்டதை அடுத்து, அதனை எம்ஏசிசி விசாரித்து, அதன் அறிக்கையைச் சட்டத் துறைத் தலைவர் அலுவலக்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
நம்பந்தப்பட்ட நபரை விசாரணை செய்தபோது, 2 எம்ஏசிசி அதிகாரிகளோடு ஒரு தனிப்பட்ட நபரும் தம்மைச் சூழ்ந்து கொண்டு, அந்த நெருக்குதலைத் தந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
