
கெடா, பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நெகிரி செம்பிலான் அரசு நன்கொடை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இதுவரை மொத்தம் 20,000 ரிங்கிட் வசூலிக்கப்பட்டிருப்பதாக கெ அடிலானின் இளைஞர் பிரிவுத் தலைவர் Taufik Abdul Ghani (தாவ்ஃபிக் அப்துல் கனி) தெரிவித்தார்.
வசூல் செய்யப்படும் நிதி ஜூலை 9ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக இருந்த நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் Aminudin Harun க்கு (அமினுடின் ஹருணுக்கு) தமது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.
