
கோழிப் பண்ணைகளில் இருந்து உற்பத்தியாகும் ஒவ்வொரு முட்டைக்கும் அரசு 8 சென்னை உதவி நிதியாக வழங்க வேண்டுமென கால்நடை விவசாயக் கழகக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
அண்மைய காலமாக கோழித் தீவணம், கச்சா பொருள்கள், போக்குவரத்துக் கட்டணம், வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு இதனைப் பரிசீலிக்க வேண்டுமென அக்கூட்டமைப்பு கழகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் அரசு முட்டைகளுக்கான உச்சவரம்பு விலையை அறிவிதிருப்பதோடு, கோழியின் விலை கிலோவுக்கு 9.40 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
