26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

ஹஜ் பயண மோசடி: 57 போலீஸ் புகார்கள், 23 லட்சம் ரிங்கிட் மோசடி

ஹஜ் பயணிகளிடம் பொய் சொல்லி 23 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக 57 புகார்களைப் போலீசார் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சிலாங்கூரில் 620,000 ரிங்கிட் பெறுமான 25 புகார்களும் கோலாலம்பூரில் 765,000 ரிங்கிட சம்பந்தப்பட்ட புகார்களும் பெறப்பட்டன.
இந்த மோசடியில் பினாங்கில் 32,000, பேராக்கில் 25,000, நெகிரி செம்பிலானில் 16,000, திரெங்கானுவில் 38,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று 380 யாத்ரீகர்கள் மோசடி செய்யப்பட்டு மெக்காவுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்தில் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அனைவரும் யாத்ரீகர் வாரியத்தின் மூலம் மெக்காவுக்குச செல்லாமல் தனியார் பயண நிறுவனத்தை நம்பி ஏமாந்தவர்களாவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles