
முன்னாள் அமைச்சர் Shahrizat’s Abdul Jalilலின் (ஷாரிஸாட் ஜாலலில்) கணவர் Mohamad Salleh Ismail (முகமட் சாலே இஸ்மாயில்) மற்றும் அவரது இர ண்டு புதல்வர்களின் மீதான நம்பிக்கை மோசடி வழக்கை சிங்கப்பூர் மே பேங்க் மீட்டுக் கொண்டது அறிவீனம் என பிகே ஆரின் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்பி) சாடியுள்ளார்.
வங்கியில் இருந்து 2,534.203.41 ரிங்கிட்டை தேசிய ஃபீட் லோக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் பெற்று அதனை இரு வீடுகளை வாங்கி மோசடி செய்ததாக சாலேயின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எனினும் ஒரு சமரச அடிப்படையின் மூலம் அந்த வழக்கு மீட்டுக் கொண்டதைச் சாடிய ரபிஸி, மக்களி வரிப்பணம் இம்மாதிரியான மோசடி பேர்வழிக்குச் செலவழிக்கப்பட்டு மோசம் போவது நாட்டுக்குப் பெரும் துரோகம் என்று வர் ணித்தார்.
மேலும், இந்த வழக்கில் பிரதிவாதியாக இருக்கும் ஷாரிஸாட்டின் புதல்வி Wan Izzana Fatimah Zabedah என்பவருக்கு மலேசிய டிஜிட்டல் நிறுவனத்திலும் சொக்சோவிலும் பதவி வழங்கியது எந்த வகையில் நியாயம் என்றும் ரபிஸி கேள்வி எழுப்பினார்.
