
சபாவுக்கான இழப்பீட்டுத் தொகை சம்பந்தமாக சூலு சுல்தான் வாரிசுகள் மலேசியாவின் மீது பாரிசில் வழக்கு தொடர்ந்தனர்.
அதற்கு பக்காத்தான் ஹராப்பான் அரசே காரணம் என நஜிப் ரசாக் குற்றம் சாட்டுவது அறிவீனம் என பிகேஅரின் செத்தியாவங்சா எம்பி Nik Nazmi Nik Ahmad (நிக் நஸ்மி நிக் அமாட்) சாடினார்.
2013ஆம் ஆண்டு சூலு போராட்டவாதிகள் லஹாட் டத்துவில் ஊடுருவி, கலகம் விளைவித்த காரணத்தினால் வாரிசுகளுக்குச் செலுத்த வேண்டிய 5,300 ரிங்கிட் கட்டணத்தை அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் நிறுத்தினார்.
இதனை மறைத்து, அவர் பக்காத்தான் மீது அபாண்டமாகக் குறை கூறுவது ஏன் என்றும் நிக் நஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
