
அம்னோவுக்கு பெரிய எதிரியே அம்னோதான் என்று பாடாங் ரெங்காஸ் எம்பி Nazri Aziz (நஸ்ரி அஸிஸ்) குறிப்பிட்டார்.
அம்னோவில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகள் எதிர்க்கட்சியோடு இனிமேலும் நல்லிணக்க ஒப்பந்தம் வேண்டாமென்றும் 15ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டுமென்றும் துடியாய் துடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே அவர்கள் அதனை வலுயுறுத்துவதாக நஸ்ரி குறிப்பிட்டார்.
ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் அம்னோவினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்ற வாக்குறுதியை நஜிப் ரசாக்கும் ஸாஹிட் ஹமிடியும் காற்றில் பறக்க விட்டு விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
