
இந்தியாவில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் இங்கு அகதியாக அபயம் தேடி வரவில்லை என்றும் முகமது நபியின் அடிச்சுவற்றை ஒட்டி இடம் பெயர்ந்ததாக சர்ச்சைக்குரிய மத போதகர் Zakir Naik (ஸாக்கிர் நாய்க்) நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
தம்மை அவதூறாகவும் பயங்கரவாதியாகவும் நாட்டில் கலகம் விளைவிப்பவனாகவும் பேட்டியளித்த பினாங்கு துணை முதல்வர் டாக்டர் ராமசாமியின் மீது நிந்தனை வழக்கைத் தாக்கல் செய்து, அவ்வழக்கில் சாட்சியம் அளித்து வருகிறார் ஸாக்கிர் நாய்க்.
தாம் இந்தியாவுக்கு மீண்டும் செல்லப்போவதில்லை என்றும் நீதியாகவும் நியாயமாகவும் தம்மை நடத்தும் மலேசியாவிலேயே தங்கி இருக்கவே தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
