
தொழிலாளர் தருவிப்பு ஊக்குவிப்புத் திட்டத்தில் 10 கோடி ரிங்கிட்டை மோசடி செய்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
அது சம்பந்தமாகப் போலியாக விண்ணப்பம் செய்து பெற்ற பணத்தை மோசடி செய்த 66 நிறுவனங்களைச் சேர்ந்த 26 ஆண்கள் 11 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
புத்ராஜெயா, சிலாங்கூர், ஜொகூர், கெடா, பகாங், பேராக், பினாங்கு, மலாக்கா, பெர்லிஸ், கோலாலம்பூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களிலில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பலதரப்பட்ட நிலைகளில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் விரைவில் இன்னும் பலரும் கைது செய்யப்பட்டுவார்கள் என்றும் தெரியவருகிறது.
