
1எம்டிபியின் 248 மில்லியன் டாலரை சட்ட விரோதமாகப் பெற்று அதனை ஹாலிலுவுட் படமெடுத்த ரோஸ்மா மன்சோரின் புதல்வர் Riza Aziz (ரிஸா அஸிஸ்)யிடமிருந்து அந்த பணத்தைப்பெற அந்நிறுவனம் சட்ட நடவடிக்கையை எடுக்க முனைப்பு காட்டுகிறது.
ரிஸா அஸிஸ், ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஜோ லோவின் உதவியோடு அப்பணத்தை தமது Red Granite Pictures Red Granite Capital (ரெட் கிரைனைட் பிக்சர்ஸ்) மற்றும் (ரெட் கிரைனைட் கெப்பிட்டல்) நிறுவனங்களின் மூலம் சினிமா படமெடுக்க முதலீடு செய்திருந்தார்.
அரசுக்குச் சொந்தமான பணத்தைப் பெற அவர் மீது நடவடிக்கை எடுக்க வழக்குக்குத் தேவையான ஆவணங்களைப் பெற முடியுமா எனும் தீர்ப்பை உயர்நீதிமன்ற ஆகஸ்டு 4ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
