
கட்சியில் என்ன பிரச்சினை என்று அலசி ஆராய்வதை விடுத்து கயவர்களையும் ஊழல்வாதிகளையும் வேரறுப்பதில் குறியாக இருக்க வேண்டுமென பிகேஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டு.
தமக்கு எதிராகக் கருத்துக்களைச் சொல்லி வரும் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி வாய் துடுக்கானவர் என்றும் சில சமயங்களில் பிரச்சினையை உருவவாக்குவதில் வல்லவராக இருந்தாலும் மற்றவர்களைப் போல திருடராகவோ அல்லது துரோரகம் இழைப்பவராகவும் முதுகில் குத்துபவராகவும் இருந்ததில்லை என்று அவர் குறிப்ப்ட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஃபி அன்பரை பற்றி அவருக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சினையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதுபற்றி அவர் மேலும் குறிப்பிடும்போது ரபிஸி கட்சியில் கலகத்தை ஏற்படுத்தாமல், 15ஆவது பொதுத்தேர்தலில் வெல்லக்கூடிய வியூகங்களை வகுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
