
அரசின் 10 கோடி ரிங்கிட் பெஞ்சானா கெர்ஜயா திட்டத்தில் சில
மஇகா தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று மஇகாவின் துணைத் தலைவர் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனினும், அதில் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் தலைவர்களாக இருந்தாலும் அதற்கும்
ம இ கா தலைமையகத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ஊழல் தடுப்பு ஆணையம் இத்திட்டத்தில் மோசடி செய்த நாற்பதுக்கும் மேலான நபர்களைக் கைது செய்து, தடுத்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து சரவணன் மேற்கண்ட அறிவிப்பைச் செய்தார்.
