26.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

நஜிப் ரசாக்கை சிறைக்கு அனுப்ப பிகேஆர் முழு மூச்சாக வேலை செய்ய வேண்டும்

எஸ்ஆர்சி ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மக்களை கவர்வதற்காக இனத் துவேசத்தை கிளப்பி விடுவதாகவும் அதனை இனிமேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது, அவர் மீது போலீஸ் புகார்களைப் பலரும் செய்ய வேண்டும் என்றும் ரபிஸ் ரம்லி கேட்டுக்கொண்டார்.
தண்டனை பெற்ற குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிந்து, மக்களைத் தூண்டி எதிர்க்கட்சிகளின் மேல் துவேஷத்தை எழுப்பி வருவதால், அவரை சும்மா விடக்கூடாது என்றும் அவரைச் சிறைக்கு அனுப்ப எல்லோரும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தம்மைப் பொருத்தவரை தாம் இலாபம் கருதி எந்த அரசுப் பதவியையும் பெறும் நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை என்றும் தாம் எப்போதும் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு விசுவாசமாக இருக்கும் வேளையில் அவர் தவறு செய்தால் அதனைத் தட்டிக் கேட்க தட்டிக் கேட்க தயங்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles