
இளைஞர்கள் வருங்காலத் தலைவர்கள் என்ற கூற்றின் அடிப்படையில், பக்காத்தான் ஆட்சியில் தாம் அமைச்சரவையில் இடம்பெற மறுத்து விட்டதாக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
துன் மகாதீர் 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தபோது, அவருடன் பல முறை நேருக்கு நேர் மோதி கடுமையாக விமர்சித்ததாக லிம் கிட் சியாங் ஒப்புக்கொண்டார்.
எனினும் பக்கத்தான் ஆட்சியில் அனுபவமிக்க தலைவர்கள் இல்லாத நிலையில் அவரை பிரதமர் நியமிக்க தாம் ஆதரவு தந்ததாகத் தெரிவித்தார்..
ஆயினும், ஜசெகவின் சார்பில் 5 முழு அமைச்சர்கள் பதவியேற்றது தமக்கு மன நிறைவைத் தந்ததாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டி ஒரு செனட்டர் பதவியை வழங்க பிரதமர் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
