
கோவிட் பெருந் தொற்றுக்குப் பின்னர் கோழி, முட்டை விலைகள் அதிகரித்து குறைந்தது 10,000 பள்ளி சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டதாக மலேசிய பள்ளி சிற்றுண்டிச் சாலை கழகத்தின் தலைவர் Khairuddin Hamzah (கைருடின் ஹம்ஸா) தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு மாணவருக்கும் அரசு வழங்கும் ரிம, 2.50 ரிங்கிட் மானியத்தை அதிகரிக்காவிட்டால் இன்னும் 1,000 உணவுக் கடை முதலாளிகள் இத்தொழிலில் இருந்து காணாமல் போவர் என்று அவர் எச்சரித்தார்.
எனவே, தற்போதுள்ள மானியமான ரிம. 2.50லிருந்து தீபகற்ப மலேசிய பள்ளிகளுக்கு ரிம. 4.50 ரிங்கிட்டாகவும் சபா, சரவாக்கில் 4.00 ரிங்கிட்டாகவும் அதிகரிக்க வேண்டுமென கைருடின் கேட்டுக் கொண்டார்.
