26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பெர்கெசோ அலுவலகத்தை எம்ஏசிசி சோதனையிடவில்லை

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பெர்கெசோ அலுவலகத்தை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் சோதனை இடவில்லை என்று அதன் தகவல் பிரிவு அதிகாரி ராயா தெரிவித்தார்.
நேற்று பெர்கெசோ அதிகாரிகள் 40 பேர் எம்ஏசிசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செய்தி, உண்மைக்கு மாறானது என்று அவர் தெரிவித்தார்.
ஊடகங்களில் வெளியான செய்தியானது பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வேலைக்கு ஆள் சேர்க்க இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் 6 மாத காலத்தில், மாதாந்திர தொகையாக 600 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அதனைப் பயன்படுத்தி போலியான விண்ணப்பம் செய்த முதலாளிகளும் பயிற்சிக் கழகங்களும் 423 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles