
பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி தம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் தமது காலத்தில் நாட்டின் பொருளாதாரம் சிறந்து விளங்கியதாகவும் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
தமது காலதில் நாட்டின் சொத்து அதிகரித்துள்ளதாகவும் தேசிய கடன் 68 700 கோடியில் இருந்து 332,400 கோடி ரிங்கிட்டாகக் குறைந்ததாக அவர் தெரிவித்தார். .
பக்காத்தான் காலத்தில் நாட்டின் கடன் தொகை ஒரு டிரில்லியன் ஆக உயர்ந்ததாகவும் பெட்ரோனாஸின் வருமானம் 2,227 கோடி ரிங்கிட்டாக உயர்ந்த வேளையில் பக்காத்தான் காலத்தில் அது அது 121 கோடி ரிங்கிட் நட்டமடைந்ததாக நஜிப் தெரிவித்தார்.
பக்காத்தான் ஆட்சிக்கு வந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறி நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் சரிந்ததாக நஜிப் குற்றம் சாட்டினார்
