
தலைநகர் ஜாலான் பெர்டானாவில் பாட்னாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிந் 35ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான்.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2,20 மணிக்கு நேர்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Farouk Eshak தெரிவித்தார்.
வெளிநாட்டு சிறுவனான அந்த பையன் தனது தாயார் பகுதி நேரமாக வேலை செய்யும் அந்த இடத்துக்கு அங்கே உறங்கியதாகவும் தெரிகிறது.
அப்போது அவனது தாயார் சலவை செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்தச் சிறுவன் ஸ்லைடின் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது, தவறி விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது சிறுவனின் தகப்பனார் பெட்டாலிங் ஜெயாவில் வேலை செய்து வந்ததாகவும், அந்தக் குடும்பம் இங்கு கடந்த 5 ஆண்டுகளாகத் தங்கி இருப்பதாகவும் தெரிய வருகிறது.ம்.
இந்த வழக்கு 2001ஆம் ஆண்டு கவனயீன சட்டத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது
