
மனைவிக்கு சொக்சோ செலுத்தாத கணவருக்கு ரிம. 10,000 அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
வேலையிழந்த காரணத்தினால் கணவர் அதனை செலுத்த முடியாமல் போனால் அது பற்றி அவர் சொக்சோ அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இதில் பதிந்து கொண்டுள்ள மனைவி 55 வயது வரைக்கும் கணவர் அதன் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இயலாமை. நோய் போன்ற காரணங்களுக்கு மனைவிக்கும், அவரது வாரிசுகளுக்கும் அனுகூலங்கள் வழங்கப்படும் என மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்தார்.
