
அரசின் Penjana Kerjayaa (பெஞ்சானா கெர்ஜாயா) உதவித் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் நிர்வாக அதிகாரி 3 நாளைக்கு தடுத்து வைக்கப்படுவார் என்றும் அது சம்பந்தமாக 46 வயதுடைய நபரும் இன்னொரு நபரும் ஜூலை 23 ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார்.
வேலையில்லாதோருக்கு பயிற்சி கொடுத்து தயார்படுத்த அளிக்கப்பட்ட 6 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும்.
இந்த மோசடியில் ஜொகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 66 நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 7 மில்லியன் ரிங்கிட் கொண்ட 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
