
முன்னாள் சட்டத் துறை அமைச்சர் டோமி தோமஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபா மசீச இளைஞர் பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளது. .
சூலு சுல்தான் வாரிசுகளிடம் மன்னிப்பு கேட்டு டோமி தோமஸ் எழுதிய கடிதம் மலேசியாவின் இறையாண்மைக்கு ஆபத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் வெளிநாட்டில் உள்ள மலேசியாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபா மசீச கேட்டுக் கொண்டது.
அந்தக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு சபாவுக்கு 6,300 கோடி ரிங்கிட்டை மலேசியா வழங்க வேண்டும் என்று சுல்தானின் ன் வாரிசுகள் பிரான்ஸ் மாட் ரிட்டில் வழக்கைத் தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
