
இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை 1எம்டிபியின் கடன் 3,208 கோடி ரிங்கிட்டாக இருந்ததாக நிதியமைச்சர் Tengku Zabrul Abdul Aziz (தெங்கு ஸப்ருல் அப்துல் அஸிஸ்) தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 2017, 2022 மே மாதமும் அதன் கடன் மற்றும் வட்டியாக 1,085 கோடி ரிங்கிட் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1எம்டிபியின் பணம் 1,084 கோடி ரிங்கிட் கடனுக்காகச் செலுத்தப்பட்டதாவும் கடனைச் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு நிதியத்தில் இன்னும் 883 கோடி ரிங்கிட் பாக்கி இருக்கின்றது.
1எம்டிபியில் இருந்து களவாடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தைப் பெற நடவடிக்கை முடுக்கி விடப்பட்டாலும் அது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதால் வெற்றி பெற நீண்ட காலம் பிடிக்கும் என தெங்கு ஸப்ருல் தெரிவித்தார்.



