
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளை அரசு தணிக்கை செய்ய வேண்டுமென சுபாங் எம்பி வோங் சென் கேட்டுக் கொண்டார்.
அரசியல் கட்சிகள் உள்நாட்டிலுல் வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடைகளைப் பெற்று அவற்றை செலவு செய்யும்போது முறையான கணக்கு வழக்குகளை வைத்திருக்க அது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஊழலாகப் பெற்ற பணத்தைச் சில முக்கிய கட்சிகள் நன்கொடை என்று பொய்யாகச் சொல்வதும் தடுக்கப்படும் என்றும் வோங் சென் குறிப்பிட்டார்.



