
நாட்டில் ஆள் கடத்தல் நடவடிக்கை கட்டுப்பாடின்றி தொடர்ந்தால் உலகின் பட்டியலில் மலேசிய 3ஆம் தரத்தில் பட்டியலிடப்பட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டை மீட்டுக் கொண்டு மற்ற நாடுகளை நாடுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Migrant CARE (மைக்ரன் கேர்) எனும் அமைப்பைச் சேர்ந்த அலெக்ஸ் ஓங் என்பவர் கூறும்போது, அமெரிக்கா மலேசியாவை தனிமைப்படுத்தி, தனது முதலீட்டுக்குத் தடை விதித்து, பொருளாதார ஒத்துழைப்பை நிறுத்தி, மற்ற உதவி நிதிகளை நிறுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
முதலீடு செய்ய மலேசிய தகுதியில்லாத நாடாக பட்டியலிடப்படும் என்பதால் அரசு இதில் தனி கவனத்தைச் செலுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
