
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அரசு வழக்கறிஞர் Kevin Morais (கெவின் மொரையி)ஸை கடத்திச் சென்று கொன்று, உடலை சிமெண்டு தோம்பில் புதைத்து வீசிய 6 பேருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராணுவ டாக்டர் கர்னல் ஆர். குணசேகரனின் வழக்கறிஞர் என்.சிவானந்தன் கூறும்போது, அந்த அறுவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்ததாகவும் அந்த மனுவின் மீதான வழக்கின் மேலாண்மை ஆகஸ்டு 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
