
அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான நல்லிணக்க ஒப்பந்தம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை நடப்பில் இருக்கும் என்று அமைச்சர் Anuvar Musa (அனுவார் மூசா) தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் அது காலாவதியாகும் தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் அது கையெழுத்திடப்பட்ட தேதியிலிருந்து நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அதனை நீட்டிக்கக் கூடாதென்று அம்னோ கூறுவதற்குப் பதிலளித்த அவர், அந்த ஒப்பந்தமானது பிரதமருக்கும் எதிர்க்கட்சிகளுக்குமானது என்றும், அதில் அம்னோ சம்பந்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
