
நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் காலகட்டமான 2020 மார்ச் 18ஆம் தேதியிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நாட்டில் 1,600 தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பணப் பிரச்சினை, உடல்நலப் பிரச்சினை, மன உலைச்சல், குடும்பப் பிரச்சினை உட்பட பல்வேறு காரணங்களினால் தற்கொலைகள் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
