
2018லிருந்து 2022ஆம் ஆண்டு வரை நாட்டின் மருத்துவமனைகளில் 2,144 மூத்த குடிமக்கள் அனாதைகளாக விடப்பட்டுள்ளதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் Tina Harun (ரீனா ஹருண்) மக்களவையில் தெரிவித்தார்.
அதில் தனித்து வாழும் 650 முதியோரும் 380 மூதாட்டிகளும் அடங்குவர். பெரும்பாலோருக்குத் துணை, பிள்ளைகள், உடன்பிறப்புகள் இல்லாதவர்கள் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
அவர்களை உடன் கொண்டு செல்ல முடியாத குடும்பத்தினர் அதற்குத் தங்களின் குடும்பப் பிரச்சினை, கையில் போதுமான நிதியின்மை, நிரந்தர வேலை இல்லாமை போன்ற காரணங்களைக் கூறுவதாக ரீனா ஹருண் தெரிவித்தார்.
