
ஜூன் 30ஆம் தேதி முடிய நாட்டின் மொத்தக் கடன் 1.045 டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) ரிங்கிட்டாக இருந்ததாக நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெங்கு ஸஃப்ருல் தெரிவித்தார்.
இத்தொகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63.8 விழுக்காடாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதே காலகட்டத்தில் 1,980 கோடி ரிங்கிட் நாட்டின் கடனுக்கான வட்டியாகச் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, கடனைச் செலுத்த நாட்டின் வருமானமும் வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருக்கும் சொத்துகளும் ஆதாரமாக இருப்பதால் நாட்டின் பொருளாதார நிலை வலுவாகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
