
நாட்டில் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பட்டு ஏற்படாது இருக்க வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டப்பட்ட கோழிகள் இறக்குமதி செய்யப்படும் என்று தொழில்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் டான்ஸ்ரீ Noh Omar (நோ ஒமார்) தெரிவித்தார்.
கோழி இறைச்சியைக் கூட்டுறவுக் கடைகள், கோஓப் மார்ட் ஆகியவை இறக்குமதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கோழி இறைச்சியை விநியோகிக்க பல நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாககவும் இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் அமலுக்கு வருமென்று அவர் தெரிவித்தார்.
மேலும், அத்தியாவசியப் பொருள்களான சீனி, சமையல் எண்ணெய், அரிசி போன்றவை மேற்கண்ட மையங்களில் மலிவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
