
அண்மையில் மக்களவையில் வெளியிடப்பட்ட இனவாரியான அரசுப் பதவிகள் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் சீனர்கள், இந்தியர்கள், சபா, சரவாக்கில் உள்ளோருக்கு மேல் மட்டப் பதவிகளில் பாரபட்சமான, நேர்மையற்ற முறையில் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது நாட்டின் பல்லின சமுதாயத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று சபா, தெனோம் எம்பி நூரித்தா சுவால் குறிப்பிட்டார்.
அந்தப் பட்டியலில் கிரேட் 56க்கும் மேல் மலாய்க்காரர்கள் 3,300 பேர், 388 சீனர்களும், 243 இந்தியர்களும் 74 சபா பூமிபுத்ராக்களும் 53 சரவாக் பூமிபுத்ராக்களும் 3 பூர்வ இன குடிமக்களும் 42 மற்ற இனத்தவர்களும் உள்ளனர்.
