26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

பொதுச் சேவை ஊழியர்கள் திறன் தகுதி அடிப்படையில்தான் நியமிக்கப்படுகிறார்களா?

பொதுச் சேவை ஊழியர்கள் திறன் அடிப்படையில் நியமிக்கப்பட்டால் அதற்கான ஆதாரத்தை அரசு காட்ட வேண்டுமென சமூக ஆர்வலர் ரேமன் நவரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.
பொதுச் சேவை ஊழியர்களின் எண்ணிக்கை இனவாரியாகப் பிரித்து தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
திறன் தகுதி அடிப்படையில் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை கைவிடப்பட்டு பல காலம் ஆகி விட்டதாகவும் இப்போது அரசியல்வாதிகளின் சிபாரிசும், இனப் பாகுபாடுமே முதலிடத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்,
மலாய்க்காரர் அல்லாதோர், மேல்மட்டப் பதவிகளுக்குச் செல்ல முடியாத காரணத்தினால் அரசுப் பதவிக ளுக்கு விண்ணப்பிக்கத் தயங்குவதாக ரேமன் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles