
வாகன உதிரிப்பாக உற்பத்தியின் மூலம் ஆண்டுக்கு 2,620 கோடி ரிங்கிட்டும் 60 நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டுக்கு 500 கோடி ரிங்கிட்டும் கிடைக்கின்றது.
ஆயினும், தற்போது பொருளாதாரம் மீட்சி பெற்று வரும் வேளையில், இத்துறைக்குப் ஊழியர் பற்றாக்குறையினால் உற்பத்தி 60 விழுக்காடு மட்டுமே நடைபெறும்போது, ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், உதிரிப்பாகங்கள் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதால் வாகன உற்பத்தியும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு இதில் கவனத்தைச் செலுத்தி இத்துறைக்கு போதுமான ஊழியர்கள் கிடைக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
