
சிகாமாட் எம்பி Edmund Santhara Kumar’s (எட்மண்ட் சந்தர குமார்) பெர்சத்துவில் இருந்து விலகியதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தலைமைச் செயலாளர் Hamzah Zainudin. (ஹம்ஸா ஸைனுடின்) தெரிவித்தார்.
கட்சியின் எதிர்காலம் எந்தவொரு எம்பியாலும் தீர்மானிக்கப் படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்பிக்கள் பெரும்பாலும் தங்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதிலேயே குறிக்கோளாக இருக்கும் வேளையில், கட்சியின் எதிர்காலத்தை உறுப்பினர்களே தீர்மானிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒருவரின் செய்கையானது தனது சமயம், இனம், நாட்டுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சந்தாரா பெர்சத்துவின் இணை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விட்டதாகவும் அதில் அவருக்கு எதிர்காலம் சிறப்பாக இல்லையென்பதால் அந்த முடிவுக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
