
குறைவான வருமானம், ஊழியர் சேமநிதி, சொக்சோ, விபத்துக்கான பாதுகாப்பு, வேலையிழப்பிற்கு இழப்பீடு போன்ற தேவைகளை வலியுறுத்தி உணவு விநியோகிப்பாளர்கள் மறியல் ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். தங்களை தொழிலாளர்கள் என்று அங்கீகரித்து மேற்கண்ட அனுகூலங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில சமயங்களின் வேலை நேரம் 12 மணிக்கும் அதிகமாகச் சென்றாலும், அதிகமான போட்டியின் காரணமாக வருமானம் போதவில்லை என்பதால் அரசுக்கு அதனை உணர்த்தவே இந்த மறியலை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
