
வெளிநாட்டிற்கு மீண்டும் கோழி ஏற்றுமதியை செய்யும் பரிந்துரை குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமென, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். தற்போது நடப்பில் இருக்கும் கோழி ஏற்றுமதி தடையை மறுபரிசீலிக்கும்படி , கோழி பண்ணையாளார்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். மாதத்திற்கு 36 லட்சம் கோழிகளை ஏற்றுமதி செய்ய மீண்டும் அனுமதிக்கும்போது, உள்நாட்டு கோழி கையிருப்பு பாதிக்கப்படுமா என அரசாங்கம் ஆராயும். அதன் பின்னரே கோழி பண்ணையாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென பிரதமர் கூறினார்.
