
மலேசிய புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய நிலையிலான திருமுறை ஓதும் போட்டியில்,பேரா கிரியான் மாவட்டத்திலுள்ள கோலக்குராவ் செர்சோனீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்.
இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட இப்போட்டியின் குழுப் பிரிவில் இப்பள்ளியைச் சேர்ந்த கபிலன் யோகேஸ்வரன்,லுவிந்திரன் புருசோத்தமன்,கனகேஸ்வரி தட்சனேஸ்வரன் மற்றும் வீரதிவ்யரசன் பூவரசன் ஆகியோர் முதல் நிலையில் வென்று பள்ளிக்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த சாதனைக்கு மாணவர்களை தயார் செய்த பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி மு.மாரியம்மா,ஆசிரியர் மு.பார்த்திபன் ஆகியோரையே சாரும்..
வெற்றிப் மாணவர்களை நாமும் வாழ்த்துவோம்.
