
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறையில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை என்று சிறைத்துறையின் மூத்த இயக்குநர் Supri Hashim (சுப்ரி ஹாஷிம்) தெரிவித்தார்.
சிறையில் இருக்கும் யாரும் தேர்தல் பரப்புரை சம்பந்தமாக அறிக்கை வெளியிடத் தடை உள்ளதாகவும் அது எல்லா சிறைக் கைதிகளுக்கும் பொருந்து என்று அவர் தெரிவித்தார்.
சிறைக் கைதிகளின் கடிதங்கள் முழுமையாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
