
ஜூன் 2022 வரை நாட்டில் 2.1 மில்லியன் பதிவு பெற்ற அந்நியர்கள் வேலை செய்து வருவதாகப் பொருளாதாரத் துறை அமைச்சர் Mustapa Mohamed (முஸ்தாப்பா முகமட்) தெரிவித்துள்ளார்.
2020இல் மொத்தம் 2.1 மில்லியன் அந்நியர்கள் நாட்டில் இருந்ததாகவும் அந்த எண்ணிக்கை கடந்தாண்டு 1.9 மில்லியனாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், கட்டுமானம், தோட்டத்துறை, உற்பத்தித் துறை, வீட்டுப் பணிப்பெண் ஆகியவற்றில் இன்னும் 15 விழுக்காட்டினர் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட துறைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு கூடுதல் சம்பளம் வழங்கி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
