33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

பொதுத்தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற வேண்டும்

15ஆவது பொதுத்தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் மதித்து, கண்ணியமாகப் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
பரப்புரையின்போது சேற்றை வாரி இரைப்பது, நிந்தித்துப் பேசுவது, ஆத்திரமூட்டும் வகையில் பேசுவது, மற்றவரை அவமானப்படுத்தும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென பேரரசர் கேட்டுக் கொண்டார்.
மேலும், வேட்பாளர்களும் வாக்காளர்களும் தேர்தல் விதிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles