
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இம்முறை தம்புன் தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பத்தகுந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது போர்ட்டிக்ஷன் தொகுதி எம்பியாக இருக்கும் அவர், இதற்கு முன்னர் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 1982 முதல் 2015ஆம் ஆண்டு வரை 5 முறை எம்பியாகப் பதவி வகித்து வந்துள்ளார்.
இத்தேர்தலில் போட்டியிட நெகிரி செம்பிலான், ஜொகூர், பேராக் ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
போர்ட்டிக்ஷனில் இருந்து அவர் விலகும் நிலையில், நெகிரி செம்பிலான் பிகே ஆர் தலைவர் அமினுடின் ஹருண் அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.
