
அரசின் வழக்குகளைக் கையாள முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ், 23 தனியார் துறை வழக்கறிஞர்களை நியமித்ததாக அவரின் நடவடிக்கையை ஆராய ஏற்படுத்தப்பட்ட பணிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கண்ட நியமனங்கள் அரசாங்கத்தின் வழக்க நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான அரசு வழக்கறிஞர்கள் இருக்கும்போது, டோமி தோமஸ் அவர்களுக்குத் திறமையோ, அனுபவமோ, நம்பிக்கையோ இல்லாமை என்ற காரணத்தைக் காட்டி, வெளியாரை நியமித்தது அரசின் ரகசியங்களைப் பொதுவில் அம்பலம்படுத்தும் செயல் என பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.
