
அண்மையில் நாட்டில் கோவிட் ஓமிக்ரோன் XBB தொற்று கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, அது வெகுவாகப் பரவும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் அதன் தாக்கம் அதிகரிக்கும் என நம்பப்படுவதாகப் பராமரிப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மக்கள் அது பற்றி அச்சப்படத் தேவையில்லை. அமைதி காக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். அத்தொற்றின் காரணமாக இறப்போ அல்லது மருத்துவமனை பதிவோ இது வரை இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் அத்தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
