
எதிர்க்கட்சியிடம் இருக்கும் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் தாம் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இது வரை அது பற்றி அறிவிப்பு எதுவும் வராத நிலையில், கட்சியிணன் மேல்மட்டத் தலைவர்கள் அது பற்றி ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரெம்பாவ் தொகுதியில் 3 முறை வென்றவரான கைரி ஜமாலுடின், அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசானின் கடுமையான நெருக்குதலின் காரணமாக அத்தொகுதில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாம் போட்டியிடவிருக்கும் தொகுதி வேறு மாநிலத்தில் கூட இருக்கலாம் என்றும் அவர் கோடி காட்டினார்.
