
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தமது தந்தை நஜிப் ரசாகிற்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி வழங்க வேண்டுமென்று அவரின் புதல்வி Nooryana Najwa Najib வலியுறுத்தியுள்ளார்.
நஜிப்பிற்கு தேர்தல் பரப்புரை செய்வதற்கு அனுமதியில்லை என்று சிறைத் தலைமை இயக்குநர் அறிவித்த பின்னர், நூர்யானா அது பற்றிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2015இல் அன்வார் இர்பாஹிம் ஓரினப் புணர்ச்சி வழக்கில் சிறையில் இருந்தபோது, தேர்தல் பரப்புரைக்கு அனுமதியளித்திருப்பதாகவும், தமது தகப்பனாருக்கு அது மறுக்கப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
