
🔊To listen to this news in Tamil, Please select the text.
மூன்று அமைச்சுகள், 4 அரசு ஏஜென்சிகளின் தணிக்கை அறிக்கையில் அரசின் பணம் 117.5 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தேசிய தணிக்கையாளாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுங்க வரி மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு வாகனங்களுக்கு முறையான வரி விதிப்பு இல்லாததால் அந்த அமைப்புகளுக்கு 116.95 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் உணவு தொழில்துறை அமைச்சின் உதவிநிதி மற்றும் பல்வேறு திட்டங்கள் முறையாகத் திட்டமிடாது நிர்வகிக்கப்பட்ட வகையில் அதற்கு 42 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் துறையில் அபராதம் வசூலிக்காமலும் குத்தகைகளில் சரியான ஒப்பந்தம் இல்லாமையின் காரணமாக அதில் 54 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தொடர்பு, பல்லூடக டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் விரயமானதாகத் தேசிய தணிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



